கவிதை
இதோ இந்த
மனச் சிதறல்கள் இவன்
சிறு வயது தவம்
இன்று இவை உறுபெற்றன.
பதினான்கு வயதில் இருந்து
இவன் கோர்த்த பூக்கள்
இன்று பூமாலையாய் உங்கள்
பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஏனோ மனிதா இப்படி ஆனாய்?
தெரிந்தே சென்று குழியில் விழுந்தாய்
உந்தன் உருவம் நீயே மறந்தாய்
ஊரார் உருவம் உன்னில் பதித்தாய்
ஏனோ மனிதா இப்படி ஆனாய்?
இதயம் என்னும் இலக்கம் இழந்தாய்
பார்வைக்கு ஏங்கும் பழியினை பெற்றாய்
சொல்லில்சாகும் சோகம் சுமந்தாய்
ஏனோ மனிதா இப்படி ஆனாய்?
எண்ணித் துணியும் எண்ணம் இழ்ந்தாய்
வாழ்வை தேடும் வாட்டம் தொலைத்தாய்
வானே எல்லை என்பதை புதைத்தாய்
ஏனோ மனிதா இப்படி ஆனாய்?
காதல் என்னும் கடலில் விழுந்தாய்
காலம் முழுதும் கற்பனை வளர்த்தாய்
கண்ணின் இமைபோல் உனையே
கடைசிவரை நானிருந்து காப்பேன்
விண்ணும் மண்ணும் சாகும்
இருவரும் பின்னும் வாழ்வோம்
காதல் கொண்டேன் உன்மேல்
சாதல் நீயின்றி சுகமே
ஈதல் நினதன்பு குணமே
ஈந்தாய் உனதன்பு மனமே
பிரம்மன் அவனது வாழ்வில்
திறமாய் செய்தது நினையே
கண்முன் கடவுளே வரினும்
உன்முன் அவரெல்லாம் சருகே
நீயின்றி வாழும் நிலமோ
நீரின்றி வாழும் நிலையே
தீயின்றி ஏது வெளிச்சம்
நீயின்றி எதற்கு சுவாசம்
இதற்கு முன்பு இப்படி ஒன்று
இருந்த தென்று என்ன சான்று?
இதயச் சுவரில் எழுதிய சொல்லை
இன்னும் ஏன்நீ வெளியிட வில்லை?
இனிபோய் நீயும் வெளியிடு வாயெனில்
இனிவரும் விளைவுகள் நேரிடும் உனக்கே
இடியும் தாங்கும் இதயம் அன்று
இரண்டே சொல்லில் இறந்தே போகும்
இதயச் சுவரும் இருகிப் போகும்
இனிய இதயம் வெம்பிச் சாகும்
இளமை முழுதும் தனிமை ஆகும்
இனிமை இளமையில் இன்மை ஆகும்
இதற்கு முன்பு இப்படி ஒன்று
இருந்ததென்று இதுவே சான்று!
வீணர் கூடி விளக்கம் அளித்து
விதவை எனுமோர் பட்டம் புனைந்து
வண்ணப் புடவை வேண்டாம் என்று
வெள்ளைப் புடவை போதும் என்றனர்!
பாரதி கண்ட புதுமை பெண்கள்
பாரதம் முழுதும் பரவிக் கிடக்க
பாகம் பிரிக்கும் பால்நிற ஆடை
பழக்கம் இன்று வேண்டும் என்றனர்
இறைவா! மங்கலம் தரத்தான் பெண்ணைபடைத்தாய்
இன்று ஏனோ அமங்கல ஆடை
இணைந்தவன் இறுதிச் சடங்கு முடிந்ததும்
இருளைக் குறிக்க வெள்ளை நிறமோ?
கணவன் பிரிந்தது கண்ணில் இருக்க
கண்டவர் சிரிக்க மல்லிகை மறியலோ?
கண்கவர் ஆடையை விதவை அணிந்து
மண்ணின் மைந்தா புவியில் நிலைப்பாயா?
மதங்கள் இல்லாத மானுடம் செய்வாயா?
கண்ணின் உறக்கம் கழற்றி எரிவாயா?
வித விதமான வேற்றுமை கலைவாயா?
விழுப்புண் ஏந்திய வீரன் ஆவாயா?
விந்தைகள் செய்து வியக்க வைப்பாயா?
புழுமின் புரளும் கடல்களை காப்பாயா?
புகைப்பதை இன்றுடன் புறக்கணித்து விடுவாயா?
கலகம் இல்லாமல் கவனங்கள் ஈர்ப்பாயா?
கடன்கள் இல்லாமல் கன்னியம் புரிவாயா?
உலகம் உணர உயர்ந்து எழுவாயா?
உன்னை உலகம் அரிய நடப்பாயா?
அறிவை வளர்க்க ஆசை கொள்வாயா?
அழிவை எதிர்க்க அறிவை வளர்ப்பாயா?
ஒரு பெண் என்னைத் தொட்டால் இனிமை
அவள் பெண்ணல்ல உண்மையில் புதுமை
அவள் புதுமையல்ல அவள் என் இமை
அவள் இமையல்ல அவள் என் சாதிமை
வான் மழைத்துளி எல்லாம் மண்ணுக்கே
என் உயிர்த்துளி எல்லாம் தமிழ்பெண்ணுக்கே
கடல் அலை எல்லாம் கரைகளுக்கே
என் கலை அலை எல்லாம் அவள் சலங்கைக்கே
வான் நட்சத்திரம் எல்லாம் இரவுக்கே
என் சரித்திரம் எல்லாம் தமிழ் பெண்ணுக்கே
கிழிந்த மனதை தைக்க கூந்தல் தருவாளா?
விழிநீர் துடைக்க கரங்கள் தருவாளா?
உயிரில் கலக்க உயிரைத் தருவாளா?
பெயரில் கலக்க பெயரைத் தருவாளா?
மசோதா வருகுது! மனிதனை திருத்த!
மாசுகள் இனி மண்ணில் குறைக்க,
மனிதன் ரெயிலென புகைத்ததை நிறுத்தி,
மாசுகள் குறைத்திட மசோதா வருகுது!
பொதுஇடங்களில் புகைக்க கூடாதாம் - நற்
சிந்தனை உடையோர் சீறி எழுந்தனர்,
புகையின் புகழினை குறைக்கவே இவ்வழி
சீரி(றி)ய சிந்தனையாளர் சிறந்து வாழிய!
தழும்புகள் பலவும் உதட்டில் தாங்கினர்,
தாங்கிய தழும்புகள் எதனால் வந்தன?
விழுப்புண் என்றதை இயம்புதல் தீது,
இழுப்புண் என்றொரு வார்த்தை தகுமோ?
மூன்று இன்ச்சினில் நிம்மதி வருகுதாம்,
அன்னைமீர்! நின்னருள் கண்டேன் - அதை
அனைவரும் உணர்ந்திட ஆசைகள் கொண்டேன்
வெற்றி கிடைத்தது பாரு - அந்த
வெண்ணிலா ஒளிர்வுக்கு ஈடொன்று உண்டோ?
கண்பெற்ற பயனின்று கண்டேன் - மேலும்
கவிபாடும் திறனினை அன்னையால் பெற்றேன்!
கவிஎழுதும் திறனொன்று போதும் - இந்த
கலியினில் அன்னையின் புகழினைச் சொல்வேன்!
ஆதவன் கதிர்களின் முன்னே - அந்த
அகல பனிமலை கறைவது போலே,
வேத குரிசிலே நின்னை - நான்
வேண்டிய பொழுதினில் பாவங்கள் சாமோ?
வீணர்கள் வாழ்கின்ற ஊரில் - அன்னை
வீழ்ச்சிகள் இல்லாமல் காத்திட கண்டேன்,
